வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை:
15 வருடங்களாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வரும் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.வீரப்பன் பிடிபட்டால் அது தேர்தலில் தி.மு.க.விற்கு அதிக பலத்தை கொடுக்கும் என்று கருதுவதால் போலீசாரின் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, போலீசார் கைது செய்துள்ளதாக கூறும் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவரான மாறனை பற்றிய கடலூர் போலீசாரின் வீடியோகாட்சிகளை காட்டும் போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியது பற்றிய தகவல் இல்லை.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனும் அதிரடிப்படை தலைவர் ஐ.ஜி.பாலசந்திரன், பூண்டி மலைப்பகுதி சீதைவனக் காட்டில் மாறன்பிடிபட்டதாகக் கூறுகிறார்.
வீரப்பன் தேடுதல் வேட்டை பற்றிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது. கேரள காட்டில் வீரப்பன் இருப்பதாக தமிழக போலீஸ்கூறியதை கேரள அரசு மறுத்தது.
ஆனால், சில நாட்களுக்கு பிறகு, கேரளத்தின் வாலையாறு காட்டுப் பகுதியில் நடந்த சண்டையில் வீரப்பன் ஆட்களை சுட்டதாகவும், தப்பியோடிய அவர்கள்பணம், ஆயுதங்கள் மற்றும் பல விலை மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் விட்டுச் சென்றதில் டிஜிட்டல் டைரியும் ஒன்று, அதில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் தொலைபேசி எண்கள் இருந்தது எனவும்தகவல்கள் வெளியாகின.
இது பற்றி அ.தி.மு.க.வின் ஜெயலலிதா கருத்து தெரிவித்த போது கருணாநிதியை காப்பாற்ற அந்த டைரி மறைக்கப்பட்டது எனவும், ஒரு நாள் கருகிப்போன ஒரு சடலத்தை கொண்டு வந்து இது தான் வீரப்பன் எனவும், அதிரடிப்படையுடன் நடந்த சண்டையில் அவன் இறந்ததாகவும் தெரிவிப்பார்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த போலீசார் கேரள காட்டில் சுடப்பட்டது வீரப்பன் கும்பல் அல்ல, வேறொரு கடத்தல் கும்பலாக இருக்கலாம் எனவிளக்கமளித்தனர்.
இந்நிலையில், வீரப்பன் கூட்டாளி மாறன் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளிடம் விசாரித்ததில்வீரப்பன் மீண்டும் ஈரோடு காட்டுப்பகுதிக்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications