பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு தடை?
இஸ்லாமாபாத்:
இஸ்லாமிய சட்டப்படி காதல் திருமணம் செல்லாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து லாகூர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் முஸ்லீம்கள் சிலர் சார்பில் காதல் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முகமது மனுக் கோரியிருந்தார்.
பொதுநலன் கருதி லாகூரைச் சேர்ந்த முகமது எஸான் மஸ்சூத் என்பவர் கொடுத்திருந்த அந்த மனுவில், முஸ்லீம் இனப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிதிருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கை வீணாவதுடன் பெற்றோர், உறவினர்களுக்கும் கெட்ட பெயர்ஏற்படுகிறது.
குரானில் கூறியுள்ளது போல் முஸ்லீம் இன பெண்கள், வீட்டை எதிர்த்து வேறு ஒரு வாலிபரைத் திருமணம் செய்து கொள்வது குற்றமாகும். இந்தபாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று இருப்பதால் பாகிஸ்தானில் காதல் திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதுபெடரல் ஷெரியாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
பின்னர் இவ்வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஸ்லீம் இன சட்டப்படி காதல் திருமணம் செல்லாதுஎன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் முஸ்லீம் இனப் பெண்கள், உறவினர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதுதான் சட்டப்படி செய்துகொண்ட திருமணமாகும் என்றும் கூறியது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications