ஜெயில் அல்லது பெயில் .. நாயுடு கிண்டல்
கோவை:
ஜெயில் அல்லது பெயில் இது தான் காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணியின் இரண்டு அம்சக் கொள்கையாக உள்ளதுஎன கோவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசினார்.
கோவையில் நடந்த பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுக் கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் வித்தியசமானது. அந்த அணியில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என நீங்கள் கவனித்து பார்க்கலாம். சோனியா, அவரது கட்சியினர், லல்லு பிரசாத் யாதவ்,ஜெயலலிதா என ஊழல்களின் மொத்த உருவமாக எதிரணி உள்ளது.
இவர்களது ஆறு மாதத்திற்கு ஒரு தேர்தல் வர வேண்டும் என இவர்கள் நினைக்கின்றனர் . இக் கூட்டணியின்நோக்கம் எல்லாம், எலெக்ஷன், கலெக்ஷன் மட்டுமே.
அடுத்து இக் கூட்டணியின் இரண்டு அம்சங்களாகத் திகழ்வது பெயில் அல்லது ஜெயில் என்பது மட்டுமே. கடந்தகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் "ஸ்கேம், ஸ்கேம், ஸ்கேம் என்றார்கள் நாங்கள் இப்போது ராம்..ராம்....ராம் என்றுசொல்கிறோம் என்றார் வெங்கய்யா நாயுடு.












Click it and Unblock the Notifications