காதல் ஜோடிகளின் சோக முடிவு
ஊட்டி:
ஊட்டியில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற 3 காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி பலியானது.
ஊட்டியில் கடந்த காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி 3 காதல் ஜோடிகள் வந்தனர். இவர்கள் அனைவரும்மதுரையைச் சேர்ந்தவர்கள். இங்கு கண்ணன் (20)- மீனா (18), கருணாகரன்(19)- தேவி (18), கோபி - -(20) கற்பகம்(18) ஆகியோர் வந்தனர்.
இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.இதையடுத்து ஊட்டிக்கு வந்து அங்கு ஊட்டியை சுற்றிப் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கினர். மறுநாள் அனைவரும் விஷம் அருந்தி மயக்கநிலையில் கிடந்தனர். இதையடுத்து 3 காதல் ஜோடிகளும் ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர். இதில், கருணாகரன் - ஜோடி சிகிச்சை பலனின்றி இறந்தது.
இச்சம்பவத்தில் தேவியின் பெற்றோர்கள் அவர்களது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்ல மறுத்துஊட்டியிலேயே உடலை அடக்கம் செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications