வீரப்பனுக்கு ரூ 20 கோடி கொடுக்கப்பட்டதா?
கோவை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ரூ 20 கோடி கொடுக்கப்பட்டது என்றுபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மாறன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மாறனைப் போலீசார் கைது செய்தனர்.இவரை காட்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாறனிடம் நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள்வெளியாயின.
இதில், ராஜ்குமாரை விடுதலை செய்ய வீரப்பனுக்கு 20 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் கைமாறியதாக மாறன்வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாறனிடம் நடந்த விசாரணை நடத்தி, அவரது கூட்டாளிகள் மற்றும் தொடர்புடைய சிலபிரமுகர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசராணை நடந்து வருகிறது. இந்த பிரமுகர்கள் யார் என்ற விபரத்தைப் போலீசார்வெளியிடவில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகு இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்துமுடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவாணி மலைப் பகுதியில் தொடர்ந்து போலீசார் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.காட்டில் வீரப்பன் கூட்டாளிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறதுஎன போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications