த.மா.கா.விற்கு 40 சீட் தான் .. முதல்வர்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா வந்தால் 40 சீட்களுக்கு மேல் தர இயலாது என தி.மு.க. தலைவர் கருணாநிதிஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. விற்கு அளிக்கப்படும் 40 சீட்கள் தவிரகூடுதல் சீட்கள் அளிக்க இயலாது.
இது குறைவு என கருதி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. த.மா.கா. எம்.எல்.ஏ. அழகிரி, சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுடன் கூடுதல் சீட்கள் தேவை என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தற்போது சபாநாயகர் மதுரையில் இருப்பதால் தொகுதி உடன்பாடு குறித்து அக்கட்சியினர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழுவுடன் தான்பேச முடியும்.
தேவைப்பட்டால் நானும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம். எனினும், தற்போது தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுடன்பேச்சுவார்த்தை நடத்தும் த.மா.கா. தலைவர்கள், இப் பேச்சுவார்த்தைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தெரியாது. த.மா.கா.தலைவர்கள் தி.மு.க.வுடன் நடத்தும் பேச்சுவார்த்தை த.மா.கா.வின் சார்பில் மட்டுமே நடைபெறுகிறது.
பிப்ரவரி 25 ம் தேதி தொகுதி பங்கீடு குறித்தான தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் தேர்தலில் அ.தி.மு.ககூட்டணிதான் வெற்றியடையும். தி.மு.க வெற்றியடையாது என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதைமக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.