ஆலோசித்து முடிவு செய்வோம்...த.மா.கா.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் நன்மையாகும் வகையில் கூட்டணி குறித்து த.மா.கா. முடிவு செய்யும் என அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன் தெரிவித்தார்.
த.மா.கா. வின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழக அரசியல் நிலைமை ஆகியவற்றை சோனியாவிடம் எடுத்து கூற டெல்லிசென்றிருந்தார் ஜெயந்தி நடராஜன்.
சோனியாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை சென்னையில் த.மா.கா. தலைவர் மூப்பனாரிடம் தெரிவித்த பின் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, அ.தி.மு.க. வுடன் கூட்டணி பற்றி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியபின், சோனியாவும், மூப்பனாரும் சந்தித்து பேசி கூட்டணி குறித்து அறிவிப்புவெளியிடுவர். மூன்றாவது அணி குறித்து தற்போது கருத்து எதுவும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications