For Daily Alerts
Just In
திருச்சியில் ஆசியர்கள் கண்டன ஊர்வலம்
திருச்சி:
திருச்சி நகர துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக துவக்கப்பள்ளி கல்வி இயக்குநர் நாராயணசுவாமி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையில்ஈடுபடுகிறார் எனக் கூறி அதை கண்டித்து ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலம் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் சென்றடைந்தது. அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் தனி உதவியாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
நாராயணசுவாமி மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் ராசு பத்திரிக்கைக்கு அளித்த செய்திக் குறிப்பில் திருச்சியில் நடைபெற்றது மாநிலம் முழுவதும் கண்டன ஊர்வலம்நடந்தது என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 18, 2001, 5:30 [IST]