இந்தியரைக் கொலை செய்த அமெரிக்கர் கைது

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்:

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த 52 வயது இந்தியரைக் கொலை செய்தது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்தவர்திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:

நியுஜெர்சி அருகிலுள்ள பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் அவிநாஷ் கவுஷல். வயது 52. இவரைக் கொலைசெய்தது தொடர்பாக எரிக் ஜெரோம் என்ற அப்துல் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஒரு கொலை தொடர்பாக மட்டும் அப்துல் தேடப்பட்டு வரவில்லை. இவர் மேல் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஜார்ஜியா, ஏதென்ஸ், டென்னஸ்ஸே ஆகிய இடங்களில் பலரைக் கொலை செய்துகொள்ளையடித்திருக்கிறார் அப்துல் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பல இடங்களில் தூண்டில் போட்டுத் தேடி வந்தோம். ஆனால் இவர், போலீஸார் பிடியில்சிக்கவேயில்லை. இவரைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப் போலீஸ் படையினர்நியு ஜெர்ஸி நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பென்சில்வேனியா அருகே காருக்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அப்துலை கண்டு பிடித்தோம்.அவரிடம் விசாரித்தோம். அப்போதும் போலீஸார் பிடியிலிருந்து தப்பித்து விட்டார். பின்னர் சில கிலோ மீட்டர்தூரம் வரைத் துரத்திக் கொண்டு சென்று அவரைக் கைது செய்தோம்.

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், கடைகள் ஆகியவற்றில் நுழைந்து கையில் கிடைத்தவற்றைச் சுருட்டிக்கொண்டு செல்வார் அப்துல்.

இதே போல் தான் இந்தியாவைச் சேர்ந்த கவுஷலையும் கொலை செய்துள்ளார் அப்துல். அவர் எங்களுக்குக்கொடுத்த வாக்குமூலத்தில், முதலில் நான் கவுஷலின் வீட்டுக்குச் சென்று அவரது உதவியாளரிடம் பணம்கேட்டேன்.

உடனடியாக அவர் கூச்சல் போட்டு கவுஷலை வரவழைத்து விட்டார். கவுஷல் என்னிடம் தகராறு செய்தார்.இதையடுத்து அவரது தலையை வெட்டி விட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டுசென்று விட்டேன் என்று கூறியுள்ளார் என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+