பயணிக்கு அடி-உதை: டிரைவர் கிளீனர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் பயணியை அடித்த தனியார் சொகுசு பேருந்தின் ஓட்டுனரும், கிளீனரும் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரும், வேறு சிலரும் திருச்சியிலிருந்து செல்லும் சொகுசு பேருந்தில் மதுரை செல்வதற்காக பயணச் சீட்டு பெற்றிருந்தனர்.
ஆனால் பேருந்து மதுரை செல்லாது எனவும், வேறு பேருந்தில் ஏறி செல்லுமாறும் கூறியதால் பயணிகளுக்கும், ஓட்டுனர், கிளீனருக்குமிடையே கடும்வாக்குவாதம் நடந்தது.
வாக்குவாதம் முற்றியதில் சென்னையைச் சேர்ந்த பயணியை ஓட்டுநரும், கிளீனரும் அடித்தனர். இது குறித்து பயணி போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில்ஓட்டுநரையும், கிளீனரையும் கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications