கோவை குண்டுவெடிப்பு .. விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய விசாரணை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
60 உயிர்களை பலி வாங்கிய 1998ம் நடந்த குண்டுவெடிப்பு பற்றி விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டஅல்-உம்மாவின் பாஷா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்ளிட்ட அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்டனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இப்ராஹிம் என்பவர் தான் குற்றமற்றவர் என்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அவர் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குற்றவாளிகள் சார்பில் வாதாட மூன்று வக்கீல்களை மாநில சட்ட உதவிமையம் ஏற்பாடு செய்திருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications