For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி விவாகரத்தை கோர்ட் தீர்த்து வைக்கும்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

பாபர் மசூதி விவகாரம் நீதிமன்றத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என இந்திய முஸ்லீம் மதச்சட்ட வாரியத்தின்துணைத் தலைவரும், ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மெளலான முகமது ஸிராஜூல்ஹசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிருபர்களிடம் பேசிய ஹசன், பாபர் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை கட்டியது பாபர் அல்ல.எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. எனவே,பிரச்சினைக்குரிய இடத்தை வன்முறையின் மூலம் யாரும் தங்களுடைய வழிபாட்டுத் தலமாக மாற்ற முடியாது.

இரு தரப்பினரும் கூடி பேசி பாபர் மசூதி விவகாரத்தை தீர்க்க முடியாததால் நீதிமன்றம் மூலமே இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பை விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்க மறுத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு தான்முடிவு செய்ய வேண்டும்.

1992, ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து பாபர் மசூதி விவகாரத்தை விரைவில் தீர்க்கவேண்டும். அதற்காக இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம்மூலம் இதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீடிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த 52ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் சண்டையை நிறுத்தி அமைதியை கொண்டு வர மத்திய அரசு செய்யும் எந்தமுயற்சியையும் வரவேற்போம் என தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X