பெண்கள் உதவி மையம் அமைக்க அரசு திட்டம்
திருச்சி:
பெண்களுக்கு உதவும், உதவி மையங்களை மாவட்ட தலைமை காவல் நிலையங்களிலும் மற்றும் முக்கியமான இடங்களிலும் நிறுவி இது குறித்தவிழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துமாறு மாவட்ட காவல் அதிகாரிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மாநில உள்துறை செயலாளர்சாந்தா ஷீலா நாயர் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உள்துறை அலுவலகம் இது தொடர்பாக தொலைபேசித் துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அவசர உதவிக்காக தொலைபேசி எண் 100மற்றும் 101 கொடுக்கப்பட்டிருப்பது போல பெண்களுக்கு உதவ 1020 என்று தொலைபேசி எண் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தின் சேவையை பாராட்டுகிறேன். அதே சமயம் தொண்டு நிறுவனங்களும்பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும். பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயல வேண்டும் என கூறினார். முன்னதாகபெண்கள் புறக்காவல் நிலையத்தை காஜாமலை சாலை 4 ரோடு சந்திப்பில் திறந்து வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications