கேரளாவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆலப்புழா:
கேரள மாநிலம் ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்லம் மாவட்டம் அன்ச்சால் போலீஸ் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15 வீடுகளில் சேதம் ஏற்பட்டது.
இதே போல் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை தாலுக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலவீடுகளில் வைக்கப்பட்டிருந்த பீரோக்கள், கட்டில்கள், பாத்திரங்கள் ஆகியவை கீழே விழுந்தன. வீடுகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவெளியேறி ஓட ஆரம்பித்தனர்.
ஆலப்புழா மாவட்டத்திலுள்ள பெரூர்காரமா, சாத்தூரா ஆகிய ஊர்களில் உள்ள வீடுகளில் சேதம் ஏற்பட்டது. கடந்த வாரம் திங்கள் கிழமை முதல்தொடர்ந்து கேரள மாநிலம் கொல்லத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications