33 இடங்கள் கோருகிறது புதிய தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தமிழகத்திற்கு வரும் தேர்தலில் 33 தொகுதிகள் வேண்டும் எனக் கோரியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 33 தொகுதிகளை புதிய தமிழகம்கோரியுள்ளது. எனினும் அவர்கள் அளிக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்வோம்.

தமிழகத்தில் ஜாதி வெறி, குண்டர் படை மற்றும் ஊழல் போன்றவற்றை ஆதரித்து வரும் கட்சிகளை ஒழிக்கவல்லது தி.மு.க. எனவே, அதனுடன் கூட்டணிவைத்துக் கொண்டுள்ளோம். தி.மு.க.வுடன் சேரும் முடிவு உடனடியாக எடுக்கப்பட்டதல்ல.

மாஞ்சோலை விவகாரத்தையொட்டி திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுச் சம்பவத்தை விசாரித்த மோகன் கமிட்டி விசாரணை அறிக்கையை மறுத்துமற்றொரு விசாரணைக்கமிஷன் அமைக்க கோரியுள்ளோம்.

பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழகத்தில் பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் ஜாதி வெறியை தூண்ட முடியாது என தான்தி.மு.க.கூட்டணியில் சேர்ந்ததற்கான காரணங்களை கூறினார் கிருஷ்ணசாமி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+