மலேசியாவில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்
கோலாலம்பூர்:
மலேசியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் பெண்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
இது குறித்து மலேசியாவின் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பேராசரியர் இப்செங் ஹார் கூறுகையில், சமீப காலமாக இந்த நோயால் தாக்கப்படும் பெண்களின்எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் 50 வயதுக்கும்குறைவானவர்கள்.
மார்பக புற்றுநோய் நகர்புறங்களில் அதிகமாக காண்ப்படுகிறது. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
பெரும்பாலான மலேசிய பெண்கள் முன்னதாக புற்று நோய் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மார்பகங்களை இழந்து விடுவோம் என்ற காரணத்தால்புற்று நோய் முற்றிய பிறகே சிகிச்சைக்கு வருகின்றனர்.
மார்பக புற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசுக்கே சரியாக தெரியாது.ஏனென்றால் மார்பக புற்று நோயால் இறந்தவர்களின் மூன்றில் ஒரு பங்கு பேருக்குமட்டுமே மருத்துவர்களால் முறையான சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.
1993-ம் ஆண்டு 70 மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால்கடந்த ஆண்டு 180 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
சென்ற ஆண்டு 1,701 பெண்கள் மார்பக புற்று நோயால் இறந்துள்ளனர். 1989-ம்ஆண்டு 200-க்கும் குறைவானவர்களே மார்பக புற்று நோயால் இறந்தனர் என்பதுகுறிபபிடத்தக்கது.












Click it and Unblock the Notifications