நாமக்கல்லில் நிலநடுக்கம்
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் திங்கள்கிழமை காலை திடீரென லேசான நில நிடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குஜராத் பூகம்பத்திற்கு முன்பாக, கோவை, கேரளா உள்பட பல இடங்களில் நில நடுக்கம் இருந்தது. குஜராத் நில நடுக்கத்திற்குப் பிறகும் கூட கேரளமாநிலம், கோவை, தர்மபுரி உள்பட பல இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நீலகிரிப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைப் போலவே நாமக்கல் பகுதியில் எருமபட்டி, அம்பாயிபாளையம், பவித்திரம்,காவக்கரப் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. இந்தசம்பவத்தால் காலையில் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 7 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் பெரும் பாதிப்பு எதுவும்இல்லை.












Click it and Unblock the Notifications