குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5.1 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், திங்கள்கிழமை அதிகாலை கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது கட்ச் மாவட்டம்தான்என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தையே உலுக்கிய அந்த நிலநடுக்கத்தில் 30, 000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர், உறவினர்கள்மற்றும் உடைமைகளை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானிலும்:

இந்தியாவின் புஜ் நகரில் மையம் கொண்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் நகர்களிலும் உணரப்பட்டுள்ளது. திங்களன்று காலை 7 மணியளவில் ஏற்பட்டநிலநடுக்கமானது, சிந்து மாகாணத்தின் ஹைதராபாத், தார் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நாகர்பார்கர் பகுதியில் சர்ச்ஒன்றின் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனினும், இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் கிடையாது என பாகிஸ்தான் பூகம்பவியல் மையம்தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலநடுக்கம்:

இதற்கிடையே, ரஷ்யாவில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் லேசாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ,பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இந்நிலநடுக்கம் 3 என்ற ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாச்சாக்லாஎன்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரஷ்யாவில் 1988 ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+