கருணாநிதி ஓய்வு எடுக்கட்டும் .. ராமதாஸ்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி போட்டியிடுவதை நிறுத்தி விட்டு, ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் பாகூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க வுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளோம். எங்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்காத தேசியஜனநாயக கூட்டணியிலுள்ள தி.மு.க விலிருந்து நாங்கள் விலகி விட்டோம்.
தி.மு.க வில் சேரும் படி கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மூப்பனார் தி.மு.க வில் சேருவாரா? மாட்டாரா என்பதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கருணாநிதி தற்போது தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications