பா.ம.க.தேச விரோத கட்சி .. கம்யூ.
சேலம்:
பாட்டளி மக்கள் கட்சி ஒரு தேச விரோதக் கட்சி, இந்தியா என்று ஒன்று இருப்பதையே நம்பாத ஒரு கட்சி எனஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்தியப் பொதுச் செயலர் மொகித் சென் தெரிவித்தார்.
சேலத்தில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இக்கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் மொகித் சென் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் நிர்வாகம் மோசமான நிலையில் உள்ளது. நாட்டை நிர்வகிப்பதிலும்பொருளாதாரத் திட்டங்களிலும் தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சித் தேச விரோதக் கட்சி. இந்தியா என்ற பாகுபாடு இருப்பதை நம்பாத கட்சி. அதிகசீட்களுக்கு ஆசைப்பட்டுத் தான் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்துள்ளது.
கூட்டணிக்காகவும் கொள்கைக்காகவும், அ.தி.மு.க வில் சேர்ந்திருந்தால் இந்த நேரத்தில் பாரதிய ஜனதாக்கட்சியைத் திட்டித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பா.ஜ., வைப் பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சனம்செய்யவில்லை. இதற்குக் காரணம் சந்தர்ப்பவாத அரசியலாகும் என்றார் மொகித் சென்.