நீரிழிவு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் மூன்று மடங்காக பெருகும் என மத்திய சுகாதாரத்துறைமந்திரி ராஜா தெரிவித்தார்.
சென்னையில், ஆசியாவில் நீரிழிவு நோய்-2001, என்ற சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைகுறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுகாதார மற்றும் மின்துறை மந்திரி ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் அமல் படுத்தப்படும் தேசிய நீரிழிவு நோய்க் கட்டுப்பாடுதிட்டத்தினால் முன்னேற்றம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
கருத்தரங்கின் தலைவர் டாக்டர்.ஏ.ராமச்சந்திரன் பேசும் போது, கருத்தரங்கின் நோக்கம் வளர்ந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் பற்றிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications