For Daily Alerts
Just In
ஸ்ரீரங்கத்தில் ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
ஸ்ரீரங்கம்:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் இறந்தார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுதாகர் என்ற சிறுவன் குளித்துக் கொண்டிருந்த போது புதை மணலால் இழுக்கப்பட்டு ஆற்றில் மூழ்கிஉயிரிழந்தார். அவருடன் குளித்துக் கொண்டிருந்த அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் சுதாகரை காப்பாற்றமுடியவில்லை.
தகவல் அறிந்த சேவை மையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தனர். இறந்த சிறுவனின் உடல் தேடப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, February 19, 2001, 5:30 [IST]