இது வடிவேலுவின் நம்பிக்கை!
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸூம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றுமதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் வடிவேலு கோவையில் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:
தமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 30 இடங்களில்வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளோம்.
ஜனதா தள மூத்த தலைவர்கள் வி.பி.சிங், தேவே கெளடா, லல்லு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் பிற தலைவர்கள் பிப்ரவரி 27 ம்தேதி கூடி தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
அவ்வாறு அமைக்கப்படும் மூன்றாவது அணி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் என்றார் வடிவேலு.
யு.என்.ஐ.