For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளம் பெண் மீது குத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

கேரளாவில் கன்னூர் மாவடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்)கட்சியை சேர்ந்த பெண்ணின் காலில் பலவந்தமாக ஆர்.எஸ்.எஸ் என்றுபச்சைகுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுளளது.

இது குறித்து கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ. ஜெயராஜன் எழுப்பிய கேள்விக்குபதிலளித்த கேரள முதல்வர் நாயனார், பிந்து என்ற அந்தப் பெண்ணின் காலில் பச்சைகுத்தப்பட்ட சம்பவம் குறித்தது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்தசம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என உறுதியளித்தார்.

இந்த மாதம் 18-ம் தேதி, வெள்ளிக்கிழமை மூகமூடி அணிந்த இரண்டு பேர் பிந்துவேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவரை தடுத்து பிடித்து அவரதுஇரண்டு புருவங்களையும் மழித்து பின் அவரது இடது காலில்ஆர்.எஸ்.எஸ்.முத்திரையை பச்சை குத்தி விட்டு ஓடி விட்டனர் என கூறப்படுகிறது.

பிந்து அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்திலும், ஜனநாயக இந்திய இளைஞர்சங்கத்திலும் சேர்ந்த பின் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவருக்கு எதிராகசெயல்படத் துவங்கின.

பிந்து கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்குபா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்சும் எச்சரிக்கை விடுத்து வந்தன என சிபிஐ-எம் கட்சியினர்கூறுகின்றனர்.

ஆனால் பா.ஜ.க.வினர் இதை மறுத்து வருகிறார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களால்தங்களுக்கு எதிராக கூறப்படும் பிரச்சாரம் என கூறி வருகின்றனர்.

பிந்து சில நாட்களுக்கு முன் தனது விருப்பப்படியே தன் உடலில் பச்சை குத்திக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்து உள்ளூர் சிபிஐ-எம் உறுப்பினர்கள் கூறிய பின்னரே சனிக்கிழமை போலீசில்புகார் செய்ததாக கன்னூர் மாவடத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி கன்னூர் பகுதியில் நடந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அங்குஅடிக்கடி மதச் சண்டைகள் நடந்து வருகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X