இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். விமானங்கள்
ஸ்ரீநகர்:
இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் இரண்டு விமானங்கள் திங்கள்கிழமை பிற்பகல் அத்துமீறி நுழைந்தது.
அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதில் பாகிஸ்தான் விமானம் ஒன்றுநொறுங்கியது.
இன்னொரு விமானம் தாக்குதலிலிருந்து தப்பித்து மீண்டும் பாகிஸ்தானுக்கே தப்பித்து விட்டது. விழுந்து நொறுங்கிய விமானத்தின் பெயர் முஷாக் என்றும்,இது இரண்டு இருக்கைகள் கொண்டது என்றும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் இவ்வேளையில் இந்திய எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் விமானங்கள் நுழைவது இதுவேமுதல்முறையாகும்.
இந்தியா ஆட்சேபம்:
இதற்கிடையே இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் வந்தது குறித்து இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
பாக். மறுப்பு:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியிருக்க வாய்ப்பே இல்லை. இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று பாகிஸ்தான் மறுப்புதெரிவித்துள்ளது.
இதை இந்தியா நிராகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியது உண்மைதான் என்று இந்தியா கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications