மக்கள் தொகை கணக்கெடுப்பு .. 50 சதவீதம் நிறைவு
ஈரோடு:
தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை இயக்குநர் சந்திரமவுலிதெரிவித்தார்.
கோவை, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தஈரோட்டிற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் சந்திர மவுலி வந்திருந்தார். இங்கு மாவட்டக் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்று விடும். இதில், மருத்துவமனை, கல்உடைக்கும் தொழிலாளர்கள் உட்பட பள்ளி, கல்வி நிறுவனங்கள் ஆகியோரது தகவல் சேகரிக்கும் பணியும் அடங்கும்.
இந்த மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. எந்தப் பகுதியில் மந்தமாக உள்ளது எனத் தெரியவந்தால், அங்குஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு மந்தமாக உள்ள இடங்களில் பணிகளை விரைவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
மார்ச் 3 வது வாரத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும். இந்த பணி நிறைவு பெறும்போது, இந்தியாவில் ஒரு சாதனைஏற்பட்டிருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், குறைந்த நாட்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்பது தான் அந்தசாதனை.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதோடு, மாவட்ட நிர்வாகங்கள் பணியினைக் கண்காணிக்க வேண்டியதுஅவசியம் என்றார் சந்திர மவுலி.












Click it and Unblock the Notifications