மின்னணு வாக்குப் பதிவு கருவிக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நமது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. எந்தக் காரணம் கொண்டும் இதில்சமரசம் செய்யக் கூடாது.
போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்குமே வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால், யாருக்கும் வாக்கு இல்லை என்ற கட்டத்தில் வாக்காளர்தனது முத்திரையை பதித்து பெட்டியில் போட்டுவிட்டுப் போகலாம்.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் அந்த வசதி இல்லை. வாக்காளர் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பப்படாவிட்டால், அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இதை அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜெண்டுகள் பார்க்கவும் கேட்கவும்வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரகசிய வாக்கு என்ற உரிமை பறிபோய்விடும்.
அதே போல மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்காளர் பட்டனை அழுத்திய பிறகு, தேர்தல் அதிகாரியும் பட்டனை அழுத்தவேண்டும். அப்போது தான் ஓட்டு பதிவாகும். ஆளும் கட்சியின் நெருக்குதலுக்குப் பணிந்து தேர்தல் அதிகாரி நடந்து கொண்டால், அவர்பட்டனை அழுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்க் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகமலேயேபோய்விட வாய்ப்புண்டும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டசும், தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க் கட்சித் தலைவர்களாக இருந்தபோது இந்தஎந்திரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இப்போது இந்த எந்திரங்களை ஆதரிக்கின்றனர்.
அமெரிக்காவில் கூட கம்ப்யூட்டர் உதவியில் இயங்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படாமல் போய்விட்டன. இதனால் தானஅந்த நாட்டிலேயே வழக்கம்போல் வாக்குச் சீட்டில் ஓட்டு அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டரின் சிப்களின் தாய்நாடான ஜப்பானிலேயே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஓழிக்கப்பட்டுவிட்டன.
இந்த எந்திரங்களில் 7 வகைகளில் மோசடி செய்ய முடியும் என கம்ப்யூட்டர் நிபுணர் வைன் நன் கூறியுள்ளார். இவ்வளவு மோசமானமின்னணு எந்திரங்களை முதலில் உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம்.
பல குறைகள் கொண்ட இந்த மின்னணு எந்திரங்களால் பல இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்துதலைமை தேர்தல் ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனத மனுவில் கூறியுள்ளார்.