இந்திரஜித் குப்தா மரணம்
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான இந்திரஜித் குப்தா செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 81.
இந்திரஜித் குப்தா புற்றுநோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவமனை மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல் நிலை மிகவும்மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஜனவரி 17 ம் தேதி மருத்துவமனையிலிருந்து தனது வீட்டிக்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் மரணமடைந்தார். இதையடுத்து இவரது உடல் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டது.
செய்தி தெரிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன் கொல்கத்தா விரைந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி பிற பிரமுகர்களும்செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொல்கத்தா செல்வார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications