இந்திய சாப்ட்வேர் வளர்ச்சிக்கு தடை இல்லை
பெங்களூர்:
இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் ஏற்படாது என பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்குஒன்றில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் தன்மை குறித்த கருத்தரங்கு ஒன்றிற்கு ஹாங்காங்கைச் சேர்ந்த ஏசியாபிரைவேட் ஈக்விடி ரிவ்யூ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையின்வளர்ச்சி பற்றி பேசியவர்கள், இந்திய மென்பொருள் ( சாப்ட்வேர்) உற்பத்திக்கு வெளிநாடுகளில் தேவை அதிகம்.உள்நாட்டிலும் அதன் தேவை அதிகம் இருப்பதால் இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி தடையற்றதாக இருக்கும்என தெரிவித்தனர்.
கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றிய வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தின் தலைவர் திலிப் பதக், 2008ம் ஆண்டில்இந்திய தொழில் நுட்ப உற்பத்திதிறன் நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 20% அளவிற்கு வளர்ச்சி பெறும் என்பதுநாஸ்காமின் எதிர்பார்ப்பாகும். இதனை அடைவதற்கு தடையாக இருக்கும் உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகளையப்பட வேண்டும் என்றார்.
அமெரிக்காவின், ஹார்பர் வெஸ்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் எட்வர்ட கெனே பேசும் போது, அமெரிக்காவில்உள்ள பணியாளர் பற்றாக்குறைவினால், இந்தியாவிலிருந்து மென்பொருட்கள் அதிகளவில் இறக்குமதிசெய்யப்படுகின்றன. ஃபார்ச்சூன் 500 எனப்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் பாதிக்கு மேல் இந்தியமென்பொருட்களையே பயன்படுத்துகின்றன.
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டில் இந்திய நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால் வெளிநாடுகளில் இந்தியமென்பொருட்கள் அதிகளவில் விரும்பப்படுகின்றன என பிளான்டேஸியா நிறுவனத்தின் ஆனந்த் சுதர்ஸன்தெரிவித்தார்.
கருத்தரங்கில், இந்திய அரசு நிறுவன அதிகாரிகள், வெளிநாட்டு நிறுவனங்களின் வல்லுநர்கள் பலர் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications