அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது தமிழக முன்னேற்ற கழகம்
சென்னை:
தமிழக முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கூடி அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்தனர்.
தமிழக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன்,ஜான் பாண்டியன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் வரும்சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிட தமிழக முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகளைக் கேட்போம். தொகுதிப் பங்கீடு குறித்து செவ்வாய்க்கிழமை மாலைஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக முதல்வர் கருணாநிதியின் கைப்பாவையாகச்செயல்படுகிறார். அவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். அவரும்தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரே என்றார் ஜான் பாண்டியன்.
யு.என்.ஐ.