For Quick Alerts
For Daily Alerts
Just In
போலீஸ் மீது நடவடிக்கை எடுங்கள்:பா.ம.க.தொண்டர்கள் மனு
பாண்டிச்சேரி:
எந்த வித காரணமும் இல்லாமல் தங்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனக் கோரி 2 பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் துணைமண்டல மாஜிஸ்டிரேட்டிடம் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பா.மா.க. தொண்டர்களான ஞானவேல், அன்பரசு ஆகியோர் தாங்கள் தாக்கல் செய்தமனுவில், இம் மாதம் 13-ம் தேதி இரவு வீட்டில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போதுதாவல்குப்பம் காவல் நிலையத்தினர் எங்களை கைது சென்று அழைத்துச் சென்றனர்.காவல் நிலையத்தில் எங்களை கடுமையாக தாக்கினர்.
நாங்கள் எதற்காக கைது செய்யப்பட்டோம் என்பது தெரியவில்லை. நாங்கள்தாவணிகுப்பத்திற்கு அருகில் இருப்பதால் கைது செய்யப்பட்டோமா? என்பதும்தெரியவில்லை.
எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 20, 2001, 5:30 [IST]