For Quick Alerts
For Daily Alerts
Just In
தாமரைக்கனியின் மதுரை பந்த்
மதுரை:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனி அழைப்பு விடுத்திருந்த கடையடைப்புக்குஓரளவு ஆதரவு காணப்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கள் இறக்குவதாக அவர்கள்மீது பொய் வழக்கு போடப்படுவதாக கூறி அதை கண்டித்து தாமைரக்கனி மதுரையில்கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு ஓரளவு ஆதரவு மட்டுமேகாணப்பட்டது.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோ ரிக்ஷா எதுவும் ஓடவில்லை.ஆனால், பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. நகரபேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின. இயல்பு வாழக்கை எந்த விதத்திலும்பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும், சில சமூக விரோதிகள் கல் எறிந்ததில் மாடக்குளம் அருகே இரண்டுபேருந்துகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 20, 2001, 5:30 [IST]