சவூதிக்கு நாடு கடத்தப்படுவாரா பின் லேடன்?
துபை:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தலிபன்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுவதை பாகிஸ்தானிற்கான ஆப்கன்தூதர் முல்லா ஜைப் மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிகையான "டான்"னில் இதுபற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொய்னுதீன் ஹைதரின் காபூல்விஜயத்தின் போது தலிபன் தலைவர் முல்லா முகமது ஓமர் இக்கருத்தை கூறியதாக வெளியான தகவல் தவறானது.
இது தொடர்பாக காந்தஹாரை தொடர்பு கொண்டதில் இத்தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது என கல்ப் நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.
அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டிய பாகிஸ்தான் பத்திரிக்கை சவூதி அரேபியா, பின் லேடனை ஏற்க மறுத்தால் வேறொரு முஸ்லீம்நாட்டிடம் ஒப்படைக்க தலிபன்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்தது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப் சமீபத்திய பேட்டி ஒன்றில், முஸ்லீம் நாடு ஒன்றிடம் பின்லேடனை ஒப்படைத்து முஸ்லீம் நீதிபதிகளை கொண்டுவிசாரணை செய்ய தலிபன்கள் விரும்பக்கூடும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.