த.மா.கா.வுடன் பேசுவதில் அர்த்தமில்லை: முதல்வர்
சென்னை:
இனிமேலும் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சென்னையில்திங்கள்கிழமை இரவு தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள் இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு தமாகா வுடன் முடிந்த அளவு பேசி விட்டோம். தமாகாஎம்.எல்.ஏ. அழகிரி திமுக வுடன் பேச்சுநடத்தினார்.
இருப்பினும் அவர்களால் கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தொடர்ந்து தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதில் தமாகா இழுபறி நிலையையேகடைபிடிக்கிறது.
இனிமேலும் நாங்கள் திமுக கூட்டணிக்கு வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுப்பயனில்லை. அதாவது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப்பயனில்லை. தேர்தலில் 40 தொகுதிகள் கொடுக்கிறோம் என்றும் கூறிப் பார்த்து விட்டோம். அதனால் நாங்கள், இனிமேல் தேர்தல் பணிகளைக்கவனிக்கத் தொடங்கி விடுவோம் என்றார்.
முன்னதாக தமிழ் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தீரன், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, தங்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாகஅறிவித்தனர்.












Click it and Unblock the Notifications