அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தலிபன்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன் படை வீரர்கள் மத்திய ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தும் முயற்சியில் 500 க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள யாக்வாலாங் டவுன் என்ற நகரைக் கைப்பற்றும் முயற்சியில் தலிபன் படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.திங்கள்கிழமை தலிபன் வீரர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

தலிபன் படை வீரர்கள், தாக்குதல் நடத்திய போது அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்கள் கூறுகையில், ஜனவரி 7 ம் தேதி முதல் தலிபன் படைவீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் மிகவும் இள வயதுடையவர்கள். கான்டகாரில் உள்ள தலிபன் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமர் உத்தரவின்படி தலிபன் படையினர் தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர் என்றனர்.

ஆனால் தலிபன் தலைவர் ஓமர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் படுகொலைச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றார்.இதற்கிடையே, காபூலில் பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தலிபன் படை வீரர்கள் வீடு வீடாக சோதனை செய்து, ஆண்களை கைகளைக் கட்டி அழைத்துச் சென்றார்கள் என்றும், அவர்களை சுட்டுக்கொன்றார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

நியுயார்க்கைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை, இந்தப் படுகொலைச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து விரைவில் விசாரணைநடத்தும் படியும் ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது.

மேலும் தலிபன் படை வீரர்களை சமாதானம் செய்ய முயற்சித்த 30 பேரையும் அவர்கள் சுற்றி வளைத்துக் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களில் 150முதல் 280 பேரின் சடலங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+