பர்கூர் காட்டில் வீரப்பன்? அதிரடிப்படை குவிப்பு
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரள எல்லைப் பகுதியிலிருந்து பர்கூர் காட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதால்அதிரடிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள எல்லைப் பகுதியான சிறுவாணி, வாளையர்உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பதுங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இங்குஅதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
வீரப்பனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டதாகக் கூட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். இதில் வீரப்பனுக்குகாயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில்வீரப்பனுடன் இருந்த மாறன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாறனுக்கும், வீரப்பனுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வீரப்பனிடமிருந்து பிரிய நேர்ந்தது எனவும், இதனால்தான் மாறன் போலீசில் சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் வீரப்பன் கேரள மாநிலம் கல்லடிக் கோடு என்ற வனப் பகுதிக்குத் தப்பிச் சென்றதாகஅதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அவரைத் தேடி கல்லடிக் கோடு பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போதுவீரப்பன் பர்கூர், அந்தியூர் பகுதியில் உள்ள வனப் பகுதிக்குத் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறப்படுகிறது.