ஜெ. போட்டியிட முடியாது: அமைச்சர் சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிட முடியாது என தமிழக சட்டஅமைச்சர் ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தன்னை குற்றவாளி என அறிவிக்கும் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியுள்ளதால் தான் குற்றவாளி அல்லஎனக்கூறி ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது. இது தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படியான தேர்தல் கமிஷன் விதிகள்தெளிவாக உள்ளன.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியும் என சோ. ராமசாமி, எம்.பி. கூறியுள்ளது சட்டத்திற்கு புறம்பானது.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டால் மட்டுமே இது விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிட்டு தகுந்த விளக்கம் அளிக்கும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications