சாமி கும்பிடும் போது தீ .. சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்ருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன்இறந்து போனார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இறந்து போன சிறுவன் பெயர் ஜெகன்நாதன். இவர் பள்ளிக்கு செல்லும் முன் சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்.சாமி கும்பிடும் போது சூடம் ஏற்றி சாமிக்கு காட்டும் வழக்கமும் அவருக்கு உண்டு.
இதே போல் செவ்வாய்க்கிழமை சாமிக்கு சூடம் காட்டும் போது அவர் கையிலிருந்த சூடம் தவறி அவர் மீதுவிழுந்தது. அவரது உடைகள் தீப்பிடித்தது. அவர் உடனே உதவி கேட்டு சத்தம் போட்டார்.
அக்கம் பக்கத்து வீடடிலுள்ளவர்கள் நெருப்பை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு செல்லும் முன் அவர் இறந்து போனார் என கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications