கனடாவை வளர்க்கும் வெளிநாட்டினர்
டொரண்டோ:
கனடாவின் வளர்ச்சியில் அந்நாட்டிற்கு குடிபெயர்ந்து வருவோரின் பங்கு அதிக அளவில் உள்ளதாக அந்நாட்டுகுடியேற்றத்துறை அமைச்சர் எலினர் கப்லான் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டு பாராளுமன்றத்தில், கனடாவின் எதிர்காலத்திற்கான தற்போதைய திட்டம் பற்றிய அறிக்கையைதாக்கல் செய்து அவர் கூறுகையில்,
2002ம் ஆண்டில் 2,35,000 பேரை கனடாவில் குடியேற அனுமதிப்போம். இது கடந்த ஆண்டை விட 8,000அதிகமாகும்.
கனடாவின் குடியேற்றக் கொள்கைப்படி கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் வரைகுடிபெயர்ந்து வர அனுமதிக்கப்படுவர்.
கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போதுஅந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 26,000 இந்தியர்கள் குடியேற்றம் பெற்றனர். இந்தஎண்ணிக்கை மற்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோரின் எண்ணிக்கையை விட அதிகம்.
குடியேற்றம் பெறும் அகதிகள், மற்றும் பல தொழில்புரியும் வெளிநாட்டினர் கனடாவின் வளர்ச்சியில்குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். கனடாவில் குடியேறும் பலரும் கனடாவின் கலாசாரத்தை வளர்ப்பதிலும்முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.