விசிறி சாமியார் மரணம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வசித்து வந்த விசிறி சாமியார் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 83.
திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் ஆசிரமம் வைத்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தவர் யோகிராம் சுரத்குமார். விசிறி சாமியார் என்றுஅழைக்கப்பட்ட இவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு, யோகிராம் நவம்பர் மாதம் 23 ம் தேதி திருவண்ணாமலை திரும்பி விட்டார். பின்னர் ஜனவரி 26 ம் தேதிக்குப் பிறகு இவரதுஉடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பல மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பயனில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.20 மணிக்குமுக்தியடைந்தார்.
இவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆசிரம வளாகத்தில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. விசிறி சாமியாரின் உடல்புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்படுகிறது. புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை விசேஷ பிரார்த்தனை நடக்கிறது.












Click it and Unblock the Notifications