For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ஹைட்ரஜன் வாயு குண்டு தாக்குதல்?

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பாலஸ்தீனம் காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் மீது, இஸ்ரேல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டஹைட்ரஜன் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அமெரிக்காவிடம் பாலஸ்தீனம் புகார் கூறியுள்ளது.

பாலஸ்தீன அமைச்சர் நாபில் ஷாத் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன படை வீரர்களுக்கிடையே யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில்பாலஸ்தீன மக்களைத் தாக்குவதற்காக இஸ்ரேல், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் குண்டுகளைப் பயன்படுத்துகிறது.

காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் வீரர்கள் ஹைட்ரஜன் குண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 69 க்கும்மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்திய போது மஞ்சள் நிற வாயு வெளியேறியது.

இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் கூறியுள்ளோம். அவர்கள் இந்தத் தாக்குதல் குறித்தும், தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன்குண்டுகள் குறித்தும் பிற விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கூறுகையில், கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீது நடந்த தாக்குதலின்போது இஸ்ரேல் ஹைட்ரஜன் குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை. தங்களது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை இஸ்ரேல்வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா கூறுகையில், நாங்கள், கான் யூனிஸ் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதல் குறித்தும், தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டஹைட்ரஜன் குண்டுகள் குறித்தும் விரிவான தகவல்களைக் கொடுக்கும்படி இஸ்ரேலிடம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X