கூட்டுறவு வங்கிகளை சுரண்டும் திமுகவினர்: ஜெ. புகார்
சென்னை:
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும்படிக் கூறும் தமிழக அரசு, திமுக தொண்டர்களுக்குகடன் அளிப்பதற்காக ரூ 120 கோடியை எடுத்துத் தனியாக வைத்திருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக தொண்டர்களுக்கு தமிழக அரசு எவ்வித சாட்சியங்களும் இல்லாமல் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் வசதி செய்து கொடுக்கிறார்கள்.
அதே நேரம் ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளிலிருந்து கடன் வாங்கிய விவசாயிகளை உடனடியாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடிக்குக்உள்ளாக்குகிறார்கள்.
வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களினால் விவசாயிகளால் உடனடியாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.வாங்கிய கடனை செலுத்தும்படி, விவசாயிகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் கட்சி பிரமுகர்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் ரூ 6 முதல் 8 கோடி வரை தனியாக நிதி ஒதுக்கிவைத்திருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications