என் உயிருக்கு ஆபத்து...தாமரைகனி
சென்னை:
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைகனி கூறியுள்ளார். இதையடுத்து தனது பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான் மதுரையில் கடையடைப்புநடத்தியதால் என்னை கொல்லப் போவதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கனக சுந்தரம் மிரட்டியுள்ளார்.
எனது உயிருக்கு கனக சுந்தரத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர்காவல்துறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கண்காணிப்பாளர் கனக சுந்தரத்திடமிருந்து கைத் துப்பாக்கியை பறிமுதல்செய்துள்ளார்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனதாமரைக் கனி கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications