For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்விக்கு கடனுதவி

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விக்கு கடனுதவிவழங்கும திட்டத்தை பாண்டிச்சேரி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்தகடனுதவி வழங்கப்படும். பாண்டிச்சேர் மாநில பிற்படுத்தப்பட்ட மற்றும்சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் இந்த கடனை வழங்கவுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்ப ஆண்டு வருமானம் ரூ 42,412 -க்கு குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டமாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 75,000 அல்லது படிப்பு முடியும் வரை ரூ 3லட்சம் கடனுதவியாக வழங்கப்படும். இந்த தொகையை படிப்பு முடிந்த பின் 3ஆண்டுகளுக்குள் மாணவர்கள் திரும்ப செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்துக்காக டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவிக்கழகம் பாண்டிச்சேரிக்கு இந்த வருடம் முதல் கடனுதவி வழங்க முடிவெடுத்துள்ளது.

அதற்காக ரூ 3.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி அரசுக்கு வருடத்திற்கு 4சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் இந்தக் கடனுதவி கொடுக்கப்பட உள்ளது.இந்த நிதியை அரசு மாணவர்களுக்கு வட்டியில்லா கடனாக உயர் கல்விக்காகவழங்கும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X