ஜம்முவில் 8 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் பலி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8தீவிரவாதிகளும், ராணுவ வீரர் ஒருவரும் இறந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 4 மணிநேரங்களுக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். 8 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் சண்டையில்பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் 18 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கானேடார் என்ற பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தற்போது ராணுவ வீரர்கள், அங்குதீவிரவாதிகள் யாரேனும் மறைவிடங்களில் பதுங்கியிருக்கிறார்களா என்று தீவிரமாகத் தேடி வருகிறார்கள் என்றார்.
காஷ்மீர் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் குமார் சூரி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணப்படும் தீவிரவாதிகள் வெளிநாட்டுத்தீவிரவாதிகள் போல் காணப்படுகின்றனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications