மாணவர் மர்மச் சாவு: திருச்சியில் கண்டன ஊர்வலம்
திருச்சி:
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன்மர்மமான முறையில் இறந்து போனார். இதைக் கண்டித்து அந்தப் பள்ளியின்மாணவர்கள் கண்டன் ஊர்வலம் நடத்தினர்.
அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
சில தினங்களுக்கு முன்னால் தேசியக் கல்லூரி மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புபடித்து வந்த மாணவர் திருநாவுக்கரசு என்பவர் பள்ளியிலிருந்து திடீரென விலகினார்.பின்னர் தபோவன மடத்தில் போய் சேர்ந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் அவரது சடலம் ரயில்வே டிராக்கில் கிடந்தது. அவரதுமரணத்தில் மர்மம் இருக்கிறது என மாணவர்கள் சந்தேக்கிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் செவ்வாயக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர்அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் மூர்த்தியை சந்தித்து திருநாவுக்கரசு சாவில் உள்ளமர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இது குறித்து சிபி-சிஐடி விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் எனவும் கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.
யு.என்.ஐ.