For Daily Alerts
Just In
போலி பாஸ்போர்ட்: தமிழகம் வந்த இலங்கைப் பெண்
திருச்சி:
போலி பாஸ்போர்ட் மற்றும் இதர தஸ்தாவேஜூகளுடன் தமிழ்நாட்டுக்கு நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீஸார் மீண்டும்இலங்கைக்கே அனுப்பி விட்டனர்.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் நாகேஸ்வரி (20). இவர் புதன்கிழமை திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கையிலிருந்துவந்திறங்கினார்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் இதர தஸ்தாவேஜூகளைப் பரிசோதனை செய்து பார்த்த போது அவைகள் போலி என்று தெரிய வந்தது.
அவர் கொண்ட வந்த பாஸ்போர்ட்டில் அவரது பெயர் மெகருன்னிசா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த தஸ்தாவேஜூகள் அனைத்தும்போலி என்று கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரைப் போலீஸார் மீண்டும் அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி விட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]