நிலவில் கால் பதித்த எட்வின் ஆல்ட்ரின் இலங்கை வருகிறார்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதரான அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் இலங்கை வருகிறார்.
எதிர்காலத்தில் விண்வெளிப் பயணம் என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற இவ்வார இறுதியில் இலங்கை வருகிறார்.
ஞாயிறன்று நடைபெறும் கலந்துரையாடலில் ஆல்ட்ரினுடன் பங்கு கொள்பவர் இலங்கையில் வாழ்ந்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நாவலாசிரியர்ஆர்தர் கிளார்க். ஆர்தர் கிளார்க் பல அறிவியல் புதினங்களை எழுதியவர்.
மனிதன் விண்வெளிக்கும், நிலாவுக்கும் பயணம் செய்வான் என்பதை முதலிலேயே கணித்துச் சொன்னவர். விண்வெளிக் கலங்கள், செயற்கைக் கோள்கள் எனஅனைத்தையுமே அவை கண்டுபிடிக்கப்படும் முன்பே சொன்னவர் ஆர்தர்.












Click it and Unblock the Notifications