கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட்டது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என கேரள பாசனத்துறை அமைச்சர் மாநிலசட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராமகிருஷ்ண பிள்ளை, பாலக்காடு பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கதமிழகத்திடம் கோரிய பின்னர் 1 டி.எம்.சி நீர் விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20,000 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காக்க முடியும். இத்துடன் சேர்த்து கேரளத்திற்கு வரவேண்டிய 7.95 டி.எம்.சி நீர்பெறப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications