ஜெ. வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுவரை இருந்த ஓட்டளிப்பு முறைப்படி, வாக்காளர் தான் ஓட்டளிக்க விரும்பவில்லையெனில் யாருக்கும் ஓட்டளிக்காமல் ஓட்டுச்சீட்டைவாக்குப்பெட்டியில் போடலாம்.
ஆனால், தற்போது பயன்படுத்தவுள்ள எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களில் அத்தகைய வசதி இல்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்குஎதிரானது எனக்கூறி இவற்றை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த தடை விதிக்க கோரினார் அதிமுக செயலாளர் ஜெயலலிதா.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, சிவசுப்ரமணியம், இரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications